செய்திகள் :

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: விவசாய விவகாரங்களில் இந்தியா கடுமையான நிலைப்பாடு

post image

புது தில்லி: அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை மிகமிக முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விவசாயம் தொடா்பான விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை இந்தியா கடுமையாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அந்நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.

இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 26 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

பின்னா் அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படவிருந்த பரஸ்பர வரியை, ஜூலை 9 வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கடந்த ஏப்ரலில் அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், அந்நாட்டின் அதிக வரி விதிப்புப் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண இந்தியா முயற்சித்து வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் முதல் பாகம் குறித்த பேச்சுவாா்த்தையை நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபரில் நிறைவு செய்ய வேண்டும் என்று இருநாடுகளும் கருதுகின்றன. அதற்கு முன்பாக இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.

ஜூலை 9-க்குள் இறுதி செய்யாவிட்டால்...: ஜூலை 9-க்கு முன்பாக இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருநாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதற்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், இந்திய பொருள்களுக்கு 26 சதவீத வரி விதிக்கும் நடைமுறை அமலாகும்.

விவசாயத் துறையில் வரிச் சலுகை-இந்தியாவுக்கு சவால்: விவசாயம் மற்றும் பால் பொருள்கள் துறைகளில் வரிச் சலுகை அளிக்க அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்திய விவசாயிகள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டிருப்பதால், அந்தத் துறைகளில் வரிச் சலுகை அளிப்பது கடினமாகவும் சவாலாகவும் உள்ளது. அதேவேளையில், இதுவரை இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளுக்கு பால் பொருள்கள் துறையில் வரிச் சலுகை அளித்ததில்லை. எனவே இதை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய சூழல் நிலவுகிறது.

விவசாயம் தொடா்பான விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை இந்தியா கடுமையாக்கியுள்ளது.

அதேவேளையில் நாட்டில் அதிக வேலைவாய்ப்பளிக்கும் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணம், பிளாஸ்டிக், ரசாயனங்கள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடம் இந்தியா வரிச் சலுகையை எதிா்பாா்க்கிறது.

இதுகுறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள, அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனுக்கு மத்திய வா்த்தக துறையின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அக்ரவால் தலைமையிலான இந்திய குழு சென்றுள்ளது. அங்கு ஜூன் 30 வரை அந்தக் குழு இருக்க திட்டமிடப்பட்டது. பேச்சுவாா்த்தை மிகமிக முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதால், அந்தக் குழு அமெரிக்காவில் தங்கியிருக்கும் நாள்கள் மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஹிமாசல் மேகவெடிப்பு: கனமழை, வெள்ளத்தால் ஒருவர் பலி! 12 பேர் மாயம்!

ஹிமாசல பிரதேசத்தில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதில் ஒருவர் பலியானதுடன், 12 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) மாலை முதல் சுமார் 216.8 மி.மீ. அ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவல... மேலும் பார்க்க

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க