செய்திகள் :

'அமெரிக்கா தான் வெற்றிக்குக் காரணம்!' - மே 8-ம் தேதியை 'வெற்றி நாள்' ஆக அறிவித்த ட்ரம்ப்

post image

கடந்த ஏப்ரல் 2-ம் தேதியை, 'அமெரிக்காவின் விடுதலை நாள்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார். இப்போது, அவர் 'மே 8'-ம் தேதியை 'வெற்றி நாள்' என்று அறிவித்து அறிவிப்பு ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

'வெற்றி நாள்' குறித்து ட்ரம்ப் கூறியதாவது...

"மே 8-ம் தேதியை இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆணையில் கையெழுத்திட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது இரண்டாம் உலகப் போரின் நினைவாக அறிவிக்கப்பட்டது ஆகும்.

உலகம் முழுவதும் உள்ள இரண்டாம் உலகப்போரின் அமெரிக்கக் கூட்டாளிகள் இந்த வாரத்தை கொண்டாடுகின்றனர்.

இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர்

ஆனால், அமெரிக்கா இந்தக் கொண்டாட்டத்தில் இதுவரை இணைந்ததில்லை. ஆனால், அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும்பாலும் அமெரிக்காவால் தான் சாத்தியப்பட்டது.

நாம் அந்தத் தினத்தை கொண்டாடாமல் போவது இரண்டாம் உலகப் போரில் நமது வெற்றிக்காக உயிர் நீத்தவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். அதனால், அந்தத் தினத்தை கொண்டாடப்போகிறோம்.

80 ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவின் டாங்க், கப்பல், டிரக், விமானம், வீரர்கள் தான் எதிரிகளை அழித்தார்கள். அமெரிக்கா இல்லாமல், இந்த விடுதலை கிடைத்திருக்காது. அதனால், அந்த வெற்றியை வாங்கித் தந்த மக்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்.

இந்தப் போரினால் பல நாடுகள் சிதைந்து போயிருந்தன. அதைச் சரி செய்ய நாம் உதவினோம். ஆனால், இதுகுறித்து யாரும் பேசுவதில்லை.

இந்த நாள் குறித்து அனைத்து அமெரிக்கர்களும் பெருமை கொள்ள வேண்டும். அனைவருக்கும் இனிய வெற்றி நாள். இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வெற்றி நாளைக் கொண்டாடுவோம்.

இனி நமக்கு முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என இரு வெற்றி நாள்கள் இருக்கப் போகின்றன.

அமெரிக்கா
அமெரிக்கா

எதிர்காலத்தில், இந்த நாள்களைப் பெரிதாகக் கொண்டாடுவோம். இந்த நாளில் விடுமுறை எல்லாம் கிடையாது. ஏற்கெனவே ஒரு ஆண்டில் தேவையான நாள்கள் நம்மிடம் இல்லை. அந்த அளவுக்கு நமக்கு நிறைய கொண்டாட்டங்கள் இருக்கின்றன. இப்போதைக்கு நமக்கு முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என இரு வெற்றி நாள்கள் இருக்கப் போகின்றன.

நாம் இல்லாமல், இரண்டாம் உலகப் போரில் வெற்றி சாத்தியமாகியிருக்காது. அதற்கான பெருமையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று பேசியுள்ளார்.

IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!

'பதற்றம்!'இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் இப்போது ஒரு புதிய அப்டேட் கிடை... மேலும் பார்க்க

Live: ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!

ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரம... மேலும் பார்க்க

இந்தியா - பாக்., எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 முக்கிய நடவடிக்கைகள்!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவ... மேலும் பார்க்க

Operation Sindoor : 15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்; வானிலே முறியடித்த இந்திய ராணுவம் - முழுத் தகவல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எ... மேலும் பார்க்க

மோடி 'ஆப்சென்ட்', 'இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை'... - அனைத்துக் கட்சி கூட்ட நிகழ்வுகள்

நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் கூடங்களை குறிவைத்து தாக்கியது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: எல்லையில் தயார் நிலையில் டிரோன் எதிர்ப்பு கருவிகள்; விமான நிலையங்கள் மூடல்

சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்தது. நேற்று நாடு முழுவதும் போர்ஒத்திகை நட... மேலும் பார்க்க