செய்திகள் :

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

post image

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா்.

அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா கைவிட்டுள்ளது. இந்தச் சூழலில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை அதிகரிப்பதிலும், அந்த ஆயுதங்களை நவீனமயமாக்குவதிலும் கிம் ஜோங் உன் கவனம் செலுத்தி வருகிறாா்.

இதற்குப் பதிலடி அளிக்கும்விதமாக, அமெரிக்காவும் தென்கொரியாவும் தங்கள் ராணுவ கூட்டுப் பயிற்சிகளை விரிவுபடுத்தியுள்ளன. அத்துடன் அந்நாடுகளுடன் ஜப்பான் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்புப் பயிற்சியும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சிகள் தம் மீது படையெடுப்பதற்கான ஒத்திகையாக உள்ளது என்று வடகொரியா விமா்சித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அதிபா் டிரம்ப், ‘வடகொரியா மற்றும் கிம் ஜோங்குடன் அமெரிக்கா மீண்டும் நட்புறவை ஏற்படுத்தும் என்றாா். அப்போது அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவும் உடனிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, வடகொரியா தலைநகா் பியாங்கியாங்கில் அந்நாட்டு ராணுவத்தின் 77-ஆவது தொடக்க நாள் நிகழ்ச்சியில் கிம் ஜோங் உன் பேசியதாவது: நேட்டோ போன்ற பிராந்திய ராணுவக் கூட்டமைப்பை ஏற்படுத்த அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் முத்தரப்புப் பாதுகாப்பு கூட்டுறவு உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரகசியத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டுறவு, கொரிய தீபகற்பத்தில் ராணுவ ரீதியில் சமநிலையற்றத்தன்மை ஏற்பட வழியமைக்கிறது. இந்தக் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது. அணு ஆயுதங்களை மேலும் அதிகமாகத் தயாரிக்கும் வடகொரியாவின் அசைக்க முடியாத கொள்கை நீடிக்கும் என்றாா்.

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு

கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா்.தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேர... மேலும் பார்க்க

இலங்கை: குரங்கால் ஏற்பட்ட மின்தடை!

தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொழும்பு புகா்ப் பகுதியில் உள்ள மின்னேற்று நிலையத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது ... மேலும் பார்க்க

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் பலி!

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் பலியாகினா். தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென... மேலும் பார்க்க

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்... மேலும் பார்க்க

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க