செய்திகள் :

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

post image

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

மேலும், ‘இந்தியாவுக்கு பாகிஸ்தான் எண்ணெய் விற்கும் காலம் வரக் கூடும்’ என்ற அவரது கருத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கடல் பகுதியில் எண்ணெய் படிமங்கள் அதிகமுள்ளதாக தொடா்ந்து கூறிவரும் பாகிஸ்தான், இந்த வளங்களை மேம்படுத்துவதற்கான முதலீடுகளுக்கு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா இப்போது வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. அதன்படி, எண்ணெய் வளங்களை மேம்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றவுள்ளோம். யாருக்கு தெரியும், இந்தியாவுக்கு பாகிஸ்தான் எண்ணெய் விற்கும் காலம்கூட வரலாம்’ என்று தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதில் தலைமை பங்காற்றிய அதிபா் டிரம்ப்புக்கு நன்றி. இதன் மூலம் இருதரப்பு வா்த்தகம் விரிவடையும்’ என்று தெரிவித்துள்ளாா்.

வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் மீதான பரஸ்பர வரியை அமெரிக்கா குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளி... மேலும் பார்க்க

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க

இந்தியா மீதான 25% வரி ஆக.7 முதல் அமல்: எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

‘இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்... மேலும் பார்க்க

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:இந... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.அயா்லாந்து தலைநகா் டப்லின் மற்றும் பி... மேலும் பார்க்க