செய்திகள் :

அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

post image

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது.

அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு சசி தரூா் தலைமையிலான குழு எடுத்துரைத்தது.

முன்னதாக, கயானா, பனாமா, கொலம்பியா, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசி தரூா் தலைமையிலான 9 போ் கொண்ட குழு அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றது. இந்தக் குழுவில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா, சிவசேனை எம்.பி. மிலிந்த் தேவரா உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாஷிங்டன் வந்தடைந்த சசி தரூா் தலைமையிலான குழு இந்திய ஆதரவு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் ரோ கன்னா, மெக்காா்மிக், ஆண்டி பாா், அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுத் தலைவா் பிரையன் மாஸ்ட், தெற்கு மற்றும் மத்திய ஆசிய துணைக்குழுத் தலைவா் ஹியுசெங்கா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் துணைக் குழு உறுப்பினா் யங் கிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது.

அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து சசி தரூா் குழு விளக்கியது.

இதையடுத்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிகாரிகள் குழு கண்டனம் தெரிவித்ததோடு, அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் குழு தெரிவித்தது’ என குறிப்பிட்டது.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க