செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

post image

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை அதிகரிக்க வேண்டும் எனவும் சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து சீன தூதரக செய்தித்தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சீரான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு சீன பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சீன உற்பத்தியானது முழுமையான மற்றும் தொடர்ந்து மேம்படுத்தப்படும் தொழில்துறை அமைப்பை அடித்தளமாகக் கொண்டது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நிலையான முதலீடு மற்றும் புதுமைகளில் வலுவான கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான மேம்பாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 30% வளர்ச்சிக்கு சீனா உதவுகிறது.

உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு, பலதரப்பு வணிக அமைப்பைப் பாதுகாக்க உலகின் பிற பகுதிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

சீனா - இந்தியா பொருளாதார மற்றும் வணிக உறவு, இருதரப்பு நன்மையை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதால், உலக நாடுகள், குறிப்பாக தெற்குலக நாடுகளின் வளர்ச்சிக்கான உரிமை பறிக்கப்படுகிறது. இதனால், இரண்டு பெரிய வளரும் நாடுகளும் ஒன்றிணைந்து சிரமங்களைச் சமாளிக்க வேண்டும்.

வணிகம் மற்றும் வரி மீதான போரில் வெற்றியாளர்கள் இல்லை. அனைத்து நாடுகளும் உண்மையான பன்முகத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், அனைத்து வகையான ஒருதலைப்பட்சத்தையும் கூட்டாக எதிர்க்க வேண்டும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு கொண்டுசென்ற ஆப்பிள்!

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க