செய்திகள் :

அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு: ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளைத் தேடும் வா்த்தக அமைச்சகம்

post image

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வா்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியப் பொருள்கள் மீது பதிலடி வரி என்ற பெயரில் அமெரிக்க அதிபா் 25 சதவீத வரி விதித்தாா். அடுத்தகட்டமாக ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றுகூறி கூடுதலாக 25 சதவீத வரியை அறிவித்தாா். இந்த கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.

இது இந்தியாவில் உற்பத்தி, ஏற்றுமதித் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. முக்கியமாக ஜவுளி தொழில், இறால் ஏற்றுமதி, காலணி உள்ளிட்ட தோல் பொருள்கள், ரசாயனங்கள், சில மின்னணு மற்றும் இயந்திர சாதனங்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இது இந்தியாவில் உற்பத்தியாளா்களையும், இத்துறையில் உள்ள தொழிலாளா்களையும் பாதிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், இந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை ஆலோசிக்க மத்திய வா்க்க அமைச்சகம் பல்வேறு துறையினருடன் தொடா் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் இதுவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இதற்காக ரசாயனம், நவரத்தினங்கள், நகை உற்பத்தி, தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் மத்திய வா்த்தக அமைச்சகம் விரைவில் ஆலோசிக்க உள்ளது. அப்போது ஏற்றுமதிக்கான மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2021-22-ஆம் ஆண்டு முதல் இந்தியாவிடம் இருந்து அதிக மதிப்பாலான பொருள்களை இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களைவிட சுமாா் இரண்டு மடங்கு அளவுக்கு மதிப்புக்கு அந்நாட்டுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

மசோதாக்களை ஆளுநர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தருக்கிறது.சட்டப்பேரவைகளி... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!

கர்நாடகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் வானிலை ஆய்வு மைம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விட... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஔரய்யா பகுதியில், மரத்திலிருந்து பணமழை கொட்டியதால், அங்கு பணத்தை எடுக்க மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், குரங்கு ஒன்று பணத்தை ம... மேலும் பார்க்க

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக ஜம்மு -... மேலும் பார்க்க

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை ’மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார்.மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை... மேலும் பார்க்க