செய்திகள் :

கூடலூர்: போக்கு காட்டும் புலி, கேரளாவிலிருந்து பிரத்யேக கூண்டை வரவழைத்த வனத்துறை - என்ன நடக்கிறது?

post image

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நடமாடி வரும் புலி ஒன்று தொடர்ந்து கால்நடைகளை தாக்கி வருகிறது. சுமார் 20 கால்நடைகளுக்கு மேல் வேட்டையாடிய அந்த புலியை பிடிக்க வலியுறுத்தி வனத்துறைக்கு மக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

புலி

குறிப்பிட்ட அந்த புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்ட தேவர் சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும், அந்த புலியை உயிருடன் பிடிக்கும் முயற்சியாக 5 இடங்களில் கூண்டுகளை அமைத்துள்ளனர். ஆனால், வனத்துறையின் கூண்டுக்குள் புலி சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வரும் நிலையில், கேரளாவில் இருந்து பிரத்யேக கூண்டு ஒன்றினை வரவழைத்த வனத்துறையினர், அந்த கூண்டை பொருத்தி ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து கூடலூர் வனத்துறையினர், " கால்நடைகளை தாக்கி வரும் இந்த புலி மனிதர்களை தாக்கும் அபாயம் இருப்பதால் இந்த பகுதியில் 55 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

பிரத்யேக கூண்டு

5 கூண்டுகளைப் பொருத்தி கண்காணித்தும் அந்த புலி சிக்கவில்லை ‌. இதனால் , கேரள மாநிலம் நிலம்பூர் வனத்துறை வசம் இருந்த 30 அடி நீளம், 15 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட பிரமாண்ட கூண்டு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. கொட்டாய் மட்டம் பகுதியில் அந்த கூண்டைப் பொருத்தி கண்காணித்து வருகிறோம். இந்த கூண்டுக்குள் புலி சிக்கும் என நம்புகிறோம். 50 க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் களத்தில் உள்ளனர் " என தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: 'தந்தையின் பாதை எனக்கு வேண்டாம்' - தாதா வரதராஜன் மகன் மோகன் மறைவு; தமிழ் அமைப்புகள் இரங்கல்

மும்பையில் வரதராஜன் முதலியார் இறந்த பிறகு அவரது மகன்கள் யாரும் அவரது வழியைப் பின்பற்றாமல் தங்களுக்குத் தனித்தனி வழியை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் மோகன் மட்டும் தொடர்ந்து மும்பையில் வாழ்ந்து வந்தார்.மு... மேலும் பார்க்க

விருதுநகர்: ஏலக்காய் தோட்டத்தில் கள்ளச்சாராயம், வனவிலங்கு வேட்டை; 6 பேர் கைதின் பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் சூரியன்கல் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் ஏலக்காய், கிராம்பு உட்பட நறுமணப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.இந்த எஸ்டேட்டை தேவதானத்தைச் சே... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு - வேலூரில் அதிர்ச்சி!

வேலூர், விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த முடிதிருத்தும் சலூன் தொழிலாளி ரமேஷ். இவரின் 13 வயது மகன் சஞ்சய், வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று இரவு 8 மணியள... மேலும் பார்க்க

சரிவு பகுதியில் அத்துமீறி வுட் ஹவுஸ் கட்டிய ஆந்திரா க்ரூப்; அதிரடி காட்டிய அதிகாரிகள்- பின்னணி என்ன?

இந்தியாவின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலாவின் பெயரால் பல்வேறு விதிமீறல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்ப... மேலும் பார்க்க

கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூர... மேலும் பார்க்க

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்... மேலும் பார்க்க