செய்திகள் :

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

post image

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்திற்கு முன்பே லகான் பண்டாரே என்பவரை சஞ்சீவானி காதலித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சஞ்சீவானி தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்பில் இருந்தார். திடீரென தனது காதலனை இரவில் தனது வீட்டிற்கு வரும்படி சஞ்சீவானி அழைப்பு விடுத்தார். உடனே காதலன் பண்டாரேயும் காதலியின் வீட்டிற்கு நள்ளிரவு சென்றார்.

அவர்கள் நள்ளிரவில் வீட்டிற்குள் இருந்தபோது கணவர் வீட்டார் அவர்களை பிடித்துக்கொண்டனர். உடனே அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து வைத்துக்கொண்டு சஞ்சீவானியின் தந்தைக்கு தகவல் கொடுத்து அவரை கணவன் வீட்டார் வரச்சொன்னார்கள்.

சஞ்சீவானியின் தந்தை தனது உறவினர்கள் இரண்டு பேரையும் தன்னுடன் அழைத்து வந்தார். அவர் வந்தவுடன் அவர்கள் தனது மகளையும், அவரது காதலனையும் அடித்து உதைத்தனர். பின்னர் இரண்டு பேரையும் கை, கால்களை கட்டி ஊருக்கு வெளியில் இருந்த ஆழமான கிணற்றில் தூக்கிப்போட்டுவிட்டனர்.

இது குறித்து மறுநாள் கிராம மக்கள் மூலம் போலீஸாருக்கு தெரிய வந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்து கிணற்றில் வீசப்பட்ட இரண்டு பேரது சடலங்களையும் தேடினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சஞ்சீவானியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பண்டாரேயின் உடல் கிடைக்கவில்லை. பல மணி நேரம் தேடிய பிறகு உடலை மீட்டனர். மகளையும், அவரது காதலனையும் கொலை செய்தது தொடர்பாக சஞ்சீவானியின் தந்தை, சஞ்சீவானியின் கணவர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில் சோகம்

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சிதா(24). இவர் கல்லூரியில் படிக்குபோதே வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டார... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலி வாயில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த காதலன் - லாட்ஜில் நடந்த கொடூரம்

திருமணம் மீறிய உறவுகர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கெராசனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரக்‌ஷிதா. இவர் ஏற்கெனவே திருமணமானவர். ஆனால் தனது உறவினரான சித்தராஜு என்பவரையும் காதலித்து வந்தார். ரக... மேலும் பார்க்க

``இன்ஸ்டா ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் என்றேன்'' - பெண்ணை உயிரோடு எரித்த கணவர் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எர... மேலும் பார்க்க

சென்னை: ``நான் காதலிக்கும் பெண்ணுடன் அவர் பழகினார்'' - 2 பேரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள்

சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் 24-ம் தேதி மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: மான் வேட்டைக்கு சென்ற தலைமை காவலர்; வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்... மேலும் பார்க்க

சேலம்: பிறந்த பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு விற்ற தம்பதி; 4 பேர் கைது - விசாரணையில் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சிவகாமிக்கு, கடந்... மேலும் பார்க்க