செய்திகள் :

எண்ணெய் கொள்முதல்: ``இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்'' - USA வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா

post image

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது.

சமீபத்தில், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதை அமலுக்கும் கொண்டுவந்தார். அதற்கு இந்திய தரப்பிலிருந்து அதிருப்தியும் எழுந்தது.

பீட்டர் நவேரா
பீட்டர் நவேரா

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தனியார் செய்தியாளர் சந்திப்பில், “இந்தியா ரஷ்ய எண்ணெய்க்கான உலகளாவிய கிளியரிங் ஹவுஸாக செயல்படுகிறது.

தடையிடப்பட்ட கச்சா எண்ணெயை உயர் மதிப்புள்ள ஏற்றுமதியாக மாற்றி, ரஷ்யாவுக்கு தேவையான டாலர்களை வழங்குகிறது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் நிதியுதவி அளித்ததற்கு இந்தியா தான் காரணம்.

இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் நுகர்வோர் மற்றும் வணிகங்கள் அதிகம் இழக்கின்றன.

இந்தியாவின் பொருளுக்கு அதிக வரிகள் இருப்பதால், வேலைகள், வருமானம் மற்றும் அதிக ஊதியம் வழங்க வேண்டிவரும்.

மோடி- டிரம்ப்
மோடி- டிரம்ப்

அதனால் இந்தியத் தொழிலாளர்கள் வேலையை இழக்கிறார்கள். இது மோடியின் போர். அதற்கு நாங்கள் நிதியளிக்க வேண்டியிருப்பதால் வரி செலுத்துவோர் இழக்கிறார்கள்.

அமைதிக்கான பாதை குறைந்தபட்சம் ஓரளவுக்கு டில்லி வழியாகவே செல்கிறது. ஆனால், இந்தியர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள்.

'இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்கலாம்' எனச் சொல்கிறார்கள். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.

எனவே, ஜனநாயகங்களுடன் இணைந்து செயல்படுங்கள். இந்தியா அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளியாக நடத்தப்பட விரும்பினால், அதுபோல் நடந்துகொள்ள வேண்டும்" என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"இந்தியா கூட்டணி பீகாரில் பெறும் வெற்றிதான், அடுத்தடுத்த வெற்றிக்கான அடித்தளம்" - மு.க. ஸ்டாலின்

பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங... மேலும் பார்க்க

"இந்து பையனுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா?" - சீமான் கேள்வி

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வை... மேலும் பார்க்க

"ஓணம் பண்டிகைக்கான சிறப்பு விடுமுறை ரத்தா?" - கேரள அமைச்சர் சிவன்குட்டி விளக்கம்!

கேரளாவில் ஓணம் (Onam) மிகப்பெரிய பாரம்பரிய திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி மன்னரை (மாவேலி) நினைவுகூர்ந்து கேரளாவின் அனைத்து மதத்தினரும் 10 நாள் கொண்டாட்டமாகச் சிறப்பிக்கும் திர... மேலும் பார்க்க

Transgender’s hostel: கேரளாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட திருநங்கை மாணவர்கள் விடுதி!

கேரளாவில் திருநங்கை மாணவர்களுக்காக முதல்முறையாக தனிச்சிறப்பு விடுதி இன்று ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த விடுதிக்கு ... மேலும் பார்க்க

"விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது" - பாஜக அமைச்சர் பேச்சு

சமீபத்தில்பாஜக எம்.பி அனுராக் தாகூர், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்ளி ஒன்றில்மாணவர்களிடம் உரையாடும் போது, "விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன் ஜி தான்... மேலும் பார்க்க

ஆ.ராசா திறந்துவைத்த பஸ் ஸ்டாப்; `கட்டுமான செலவை விட விளம்பர செலவு அதிகம்போல...'- எழுந்த விமர்சனம்!

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி கனவு தற்போது சாத்தியப்பட்டிருக்கிறது. ஊட்டியில் உள்ள இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாள... மேலும் பார்க்க