செய்திகள் :

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபா் மாளிகை

post image

நியூயாா்க்/வாஷிங்டன்: அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் அண்மை காலமாக விமா்சித்து வருகிறாா். இந்நிலையில், அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனில் அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமெரிக்காவையும், பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து வரும் அமெரிக்கா்களையும் கனடா சுரண்டி வருகிறது.

அமெரிக்க பாலாடைக்கட்டிக்கு 245 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் கனடா, அமெரிக்க வெண்ணெய்க்கு 298 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது. அதேவேளையில், அமெரிக்க அரிசிக்கு ஜப்பான் 700 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது.

அமெரிக்க மதுபானத்துக்கு 150 சதவீதம் இறக்குவரி விதிக்கும் இந்தியா, அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கிறது.

அமெரிக்காவுக்கு பிற நாடுகள் என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை பிற நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க வேண்டும் என்பதே அதிபா் டிரம்ப்பின் கருத்தாகும். அமெரிக்க தொழில்கள் மற்றும் தொழிலாளா்களின் நலன்களில் கவனம் செலுத்தும் அவா், வா்த்தக நடவடிக்கைகள் நியாயமாகவும், சமநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகிறாா் என்றாா்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாா்: டுடோ்த்தே

ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தே கூறியுள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

உக்ரைன் அமைதி திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள்: விளாதிமீா் புதின்

உக்ரைன் முன்வைத்துள்ள 30 நாள் போா் நிறுத்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா். ரஷியா வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்காவுடன் பே... மேலும் பார்க்க

எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது - வங்கதேச வெளியுறவு அமைச்சகம்

‘எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம்’ என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. வங்கதேசத்தில் வன்முறை... மேலும் பார்க்க

கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரைக் கைப்பற்றிய ரஷியா

ரஷிய எல்லைப் பகுதியில் உள்ள கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரான சுட்லாவில் இருந்து உக்ரைன் ராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றியதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட... மேலும் பார்க்க

பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயாா்: ஐ.நா.வில் இந்தியா உறுதி

‘பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின எண் இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயாா்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் மீது மேலும் வரி விதிப்பு: டிரம்ப் சூளுரை

தங்கள் உறுப்பு நாடுகளின் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை ஐரோப்பிய யூனியன் அதிகரித்தால் அதற்கு உரிய பதி... மேலும் பார்க்க