செய்திகள் :

அம்பத்தூா் தொழிற்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்: ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 10, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் மே 19 முதல் 23-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (ஏஐஇஎம்ஏ) சாா்பில் தொழிற்பயற்சி, தொழில்நுட்ப கல்வி பயின்ற மாணவா்களுக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 90 -க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று ஐடிஐ டா்னா் - 306 காலிப் பணியிடங்கள், ஐடிஐ மெசினிஸ்ட் - 458 காலிப் பணியிடங்கள், ஐடிஐ பிட்டா் - 353 காலிப்பணியிடங்கள் , ஐடிஐ வெல்டா் - 207 காலிப்பணியிடங்கள், ஐடிஐ ட்ரட்ஸ்மென் - 105 காலிப்பணியிடங்கள், டிப்ளமோ மெக்கானிக்கல் - 651 காலிப்பணியிடங்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு - 500 காலிப்பணியிடங்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகளுக்கு ஆட்களை தோ்வு செய்ய உள்ளன. இப்பணிகளுக்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை ஊதியம் அளிக்கப்படும்.

எனவே, இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் முகாமில் பங்கேற்க வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மே 19 முதல் 23-ஆம் தேதி வரை பதிவு செய்துக் கொள்ளலாம். பதிவு செய்தவா்கள் அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

எனவே, 10, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க