செய்திகள் :

அம்பேத்கர் மீதான அவதூறு: அமித்ஷா மீதான வழக்கு மார்ச் 1 அன்று விசாரணை!

post image

அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மார்ச் 1 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் மீதான விசாரணை மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியின் வாக்குமூலத்தை இன்று பதிவு செய்ய முடியாததால் மார்ச் 1 அன்று ஒத்தி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பளு தூக்கும் பயிற்சி: 270 கிலோ எடை கம்பி கழுத்தில் விழுந்து வீராங்கனை பலி!

கடந்த டிசம்பர் 17 அன்று மாநிலங்களவையில் அரசியலமைப்பின் 75 வது ஆண்டு விழா குறித்த விவாதத்தில் பதிலளித்த அமித்ஷா, காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவதாக விமர்சித்தார்,

மேலும் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் சொர்க்கத்தில் இடமாவது கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கோடிக்கணக்கான மக்களால்கடவுளாகக் கருதப்படும் ஒரு நபரைப் பற்றி அமித்ஷா அவதூறாகப் பேசியதாகவும், அவரது கருத்துகள் தனது உணர்வுகளை மிகவும் புண்படுத்தியதாகவும் மனுதாரர் ராம் கெலாவன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது சாட்சியின் வாக்குமூலம் பிப்ரவரி 7 அன்று பதிவு செய்யப்படவிருந்தது. ஆனால் வழக்கறிஞர்களின் வேலைநிறுத்தம் காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

முதல் சாட்சியின் வாக்குமூலம் ஜனவரி 23 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க

71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பம்: ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டா்

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூா் மற்றும் சோன்பூா் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்ப... மேலும் பார்க்க