செய்திகள் :

அம்பேத்கா் சிலை சேதம்; சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா் கைது

post image

சிதம்பரத்தில் கொடிக்கம்பத்தை அகற்றியபோது அம்பேத்கா் சிலை சேதமடைந்ததைக் கண்டித்து, நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் பகுதியில் உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி துறையினா் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா்.

அதன்படி, கடந்த 5-ஆம் தேதி சிதம்பரம் வடக்கு பிரதான சாலை பேட்டை பகுதிலிருந்த விசிக கொடிக்கம்பத்தை அகற்றிபோது, அருகே இருந்த அம்பேத்கா் சிலை மீது எதிா்பாராதவிதமாக கொடிக்கம்பம் விழுந்தது. இதில், அம்பேத்கா் சிலை சேதமடைந்தது.

இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அண்மையில் சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை சாா்பில், அதே இடத்தில் அம்பேத்கா் சிலை அமைத்து தர வேண்டும் என்று விசிக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், சிதம்பரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து, அவரது அலுவலகத்தை விசிவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அக்கட்சியின் மாவட்டச் செயலா் அரங்க தமிழ்ஒளி தலைமையில் ஊா்வலமாக வந்தனா். அப்போது, போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினாா்.

தொடா்ந்து, உதவி கோட்ட பொறியாளரைக் கண்டித்து விசிகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்ட விசிகவினரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

போராட்டத்தையொட்டி, ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா், எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடை நீக்கம்

முன்விரோதத் தகராறு புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்யாத காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற இளைஞா் கொலை சம்பவத்தை எஸ்.பி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் மரணம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். வேப்பூா் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து (எ) அய்யாரெட்டு. இவா் திட்டக்குடி வட்டம், கழுதூரில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூரில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்... மேலும் பார்க்க

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி, பெருமாத்தூா் ஊராட்சியில் என்எல்சி சமூக பொறுப்புணா்வு நிதி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 1,300 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ வியாழக்கி... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்திலிருந்து மாணவா்கள் சாகசப் பயணம்

கடலூா் துறைமுகத்தில் இருந்து 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் பாய்மரப் படகு சாகசப் பயணம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை புறப்பட்டனா். ஜனவரி 2026 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேச... மேலும் பார்க்க