அகமதாபாத் விபத்து எதிரொலி; விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய க...
அம்மாவின் கண்டிப்பும், இழந்த அன்பும்! - மகளின் வலி | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நாங்கள் இங்கு நலம் . நீங்கள் நலமா? என தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என் குழந்தை பருவத்தில் உங்களுடைய அன்பு கிடைக்காமல் எத்தனையோ நாட்கள் ஏங்கி இருக்கிறேன். நான் நாலு அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது பூட்டிய வீட்டை திறந்து அந்த வெறுமையான வீட்டில் சாப்பிட எதாவது இருக்குதா என்று பார்த்து எதுவும் இல்லை என்று விரக்தியில் தோசையை நானே சுட்டு சாப்பிடுவேன் சீனியை வைத்து, அம்மா இல்லை என்று ஏங்கி கவலை கொள்வேன் .
நீங்க வேலைக்கு போயிடுவீங்க . வீட்டுக்கு வந்ததும் என்ன இந்த வேலை செய்யல அந்த வேலை செய்யல எல்லாம் சொல்லி திட்டுவீங்க , உன் மூஞ்யபாரு அப்பன் மாதிரியே.. அழுதுகிட்டே வேலை எல்லாம் செய்வேன்.

பள்ளி விடுமுறை விட்ட நாட்களில் மதியம் தனியே இருந்து அப்படியே படுத்து தூங்கி போவேன். எந்திரிக்கும் போது யாரும் இல்லாத அந்த வீட்டில் அம்மா அம்மா என கத்தி எத்தனையோ நாள் அழுது இருக்கிறேன். ஆனால் நீங்க என்ன நீ அழகா இல்லை மத்தவங்க மாதிரி நீ எதுக்கும் லாயக்கில்லை அப்படி சொல்லும் போதும் உண்மையில் நான் அப்படி என்று எனக்குள் ஆழமாக நம்பிக் கொண்டேன்.
எந்த திறமையும், எந்த தகுதியும், எந்த அழகும் எதுவும் எனக்கு இல்லை என்று நம்பிக்கொண்டேன் . நீங்கள் உங்கள் தோழியின் மகளை மிகுந்த அன்போடும், பாசத்தோடும் நடத்தும் போது நான் இறந்து விட கூட முயற்சி செய்திருக்கிறேன். தற்கொலை என்றால் என்ன என்று தெரியாத அந்த வயதில் மற்றவர்கள் முன்வைத்து என்னை எவ்வளவோ காயப்படுத்தும் வார்த்தைகள் கொண்டு பேசி இருக்கீங்க.

இன்னும் எனக்கு நினைவு இருக்கு 14 வயசாச்சி இன்னும் வயசுக்கு வரல நீ இருக்க வீடு வெளங்குமா கடவுள் உனக்கு நல்லது எதுவும் வைக்கல நீ பொம்பளயே இல்ல என சொல்லி திட்டுனீங்க அன்னிக்கு ,நீங்க வேலைக்கு போனதும் நான் என் கழுத்தில் உங்க சேலை வைத்து என்னை நானே நெரித்து கொண்டு இறந்து விடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் என்னால் முடியவில்லை , எனக்கு காதல் என்ற ஆசையோ எதுவும் வரவில்லை அதற்கு காரணம் என் மனதில் பதிந்து போன என் நம்பிக்கை இல்லாத அழகு எதுவும் இல்லாத அந்த மனது தான்,அதன் பிறகு எப்படியோ பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிப் படிப்பை தொடங்க ஆசைப்பட்ட போது நீங்கள் என்னை திருமணம் தான் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாய படுத்தி என்னை அடித்து எப்படியோ திருமணம் செய்து வைத்து விட்டீர்கள்.
விரும்பம் இல்லாத திருமணத்தில் உள்ள வலி இன்றும் என் வாழ்க்கையில் தொடர்கிறது. ஆனால் உங்கள் மனநிலையை நான் இப்போது புரிந்துகொண்டேன். உங்களுடைய விருப்பம் இல்லாத திருமணத்தால் நீங்கள் மனதளவில் எப்படி காயமடைந்து இருப்பீர்கள் என்று, அதனால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெறுத்து இருக்கீங்க என்று அந்த வெறுப்பின் தொடர்ச்சி தான் என் மீது நீங்கள் கொண்ட வெறுப்பும் என்று உணரமுடிகிறது.

உங்களை போல் என் வாழ்க்கை இருக்க கூடாது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியது எனக்கு புரிகிறது. இன்று நானும் ஒரு தாயான பின்பு உங்கள் உடல் சோர்வு மனசோர்வு இவை எல்லாம் கடந்து உங்கள் கசந்து போன வாழ்க்கையோடு எங்களையும் எவ்வளவு முயற்சித்து பார்த்து இருப்பீர்கள் என்று புரிகிறது.
ஆனால் விருப்பம் இல்லாத இந்த வாழ்க்கை நான் வெறுக்கவில்லை நேசிக்கிறேன். அவரும் என்னை நேசிக்கிறார். என் குழந்தைகளை நான் நேசிக்கிறேன் அவர்களும் என்னை நேசிக்கின்றன . உங்கள் வாழ்கையில் நீங்கள் இழந்தது ஆயிரம் என்று எனக்கு புரிகிறது.
உங்கள் மீது நானும் வெளிப்படையாக அன்பு காட்டாமல் இருந்துவிட்டேன். என் மீது உள்ள தவறும் புரிகிறது. இந்த கடிதத்தை எழுதும் போது பல முறை எனக்கு அழுகை வந்தது உங்கள் மீது நான் கொண்ட அன்பும் இழந்த அன்பையும் நினைவூட்டுகிறது. இப்போது என் குழந்தைகளுடன் மிக நெருக்கமாக இருக்கீங்க, அவர்களை கொஞ்சிக் விளையாடுரீங்க , என் காயங்கள் எல்லாம் மாறுகிறது , இப்போது நீங்க பொருளாதார நிலையில் உயர்வு வந்ததால் எனக்கு என்று கேட்காமலேயே பலவும் எனக்கும், என்னுடைய குழந்தைகளுக்கும் செய்றீங்க.

ஒரு முறை என் குடும்பத்தில் ஒரு பிரச்சினை வந்த போது எனக்காக நீங்க மட்டும் தான் இருந்தீங்க, அன்னிக்கு நான் உங்கள என்னோட உயிரை விட மேலாக நினைத்தேன், என் மனதில் இருந்த கசப்பு, வெறுப்பு எல்லாம் அந்த இடத்தில் உடைந்தது.
அம்மா உங்களுக்கு வயது ஆக ஆக எனக்குள் ஏதோ ஒரு பயம் தொற்றிக் கொண்டு உங்களுக்காக எப்போதும் ஒரு பிராத்தனை எப்போதும் உள்ளது . உங்களுடைய வாழ்கையை எந்த ஒரு சந்தோஷம் இல்லாமல் கடவுள் செய்த இந்த தவறுக்கு என்றும் மன்னிப்பே இல்லை அவனுக்கு .
நான் ஒருகாலும் என்னுடைய குழந்தைகளின் தன்னம்பிக்கை இழக்கும் வார்த்தைகள் கூற மாட்டேன். அவர்களுடைய அழகு திறமை எல்லாம் அவரவர் முயற்ச்சியில் உள்ளது என்று இப்போது தான் நானே புரிந்து கொண்டு என்னுடைய நம்பிக்கையின் மீது நடக்க ஆரம்பித்திருக்கிறேன். கண்டிப்பாக இது ஒரு சமூகத்தின் மாற்றமும் கூட, அம்மா நான் உங்களை அளவு கடந்து நேசிக்கிறேன். என் மீது குறை இருந்தால் என் மனதார மன்னிப்பு கேட்கிறேன் .
இப்படிக்கு அன்பு மகள் ,
ஐஸ்வர்யா .
