செய்திகள் :

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் காலமானார்!

post image

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் இன்று காலமானார்.

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரான மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 3 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் அவர் இன்று காலமானார்.

இதையும் படிக்க | மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு 9 மாதங்களுக்கு முன்னர் தனது 20-வது வயதில் இவர் இங்குள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றத் தொடங்கினார். மசூதி இடிக்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராமர் கோவிலுக்கும் இவரே தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

மஹந்த் சத்யேந்திர தாஸ் மறைவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாகி பௌர்ணமி: சங்கமத்தில் 1.60 கோடி பேர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கிட்டத்தட்ட 1.60 கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப... மேலும் பார்க்க

இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!

தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பஞ்சாப்: பாஜக

பஞ்சாப் விரைவில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து விடுதலை பெறும் என பாஜக தலைவர் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத் தளமான ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், பஞ்சாப் மக்கள் தாங்கள் ஏமாற்றப... மேலும் பார்க்க

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டிய சரத் பவாருக்கு சிவசேனா எதிர்ப்பு!

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டியதற்கு சிவசேனா புதன்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தி... மேலும் பார்க்க

மும்பையில் ஜிபிஎஸ் நோய்க்கு முதல் பலி!

மும்பையில் ஜிபிஎஸ் நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இது மும்பையில் பதிவான முதல் இறப்பாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே ச... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதலியுடன் தற்கொலை முயற்சி!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர், தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காதலி உயிரிழந்த நிலையில், இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார். மேலும் பார்க்க