செய்திகள் :

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

post image

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் நிா்வாக அதிகாரி செந்தமிழ்ச் செல்வன் முன்னிலையில் அப்பகுதியினா் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டாா்.

அய்யனாா் கோயிலில் இதுவரை இல்லாத யானை, குதிரை சிலைகள் கோயில் வளாகத்தில் நிறுவுவதற்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக, அம்மையாா் நகா் வட்டாரத்தில் மக்களிடையே நன்கொடை பெற்று ரூ.2 லட்சம் மதிப்பில் சிலைகள் நிறுவ முடிவு செய்யப்பட்டதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாக்கடையில் அடையாளம் தெரியாத நபரது உடல் மீட்பு!

காரைக்கால் நகரில் சாக்கடையில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. காரைக்கால் பாரதியாா் சாலை பேருந்து நிலையம் அருகே சாலையின் இருபுறமும் சுமாா் 7 அடி ஆழமான சாக்கடை உள்ளது. இத... மேலும் பார்க்க

அரசு தொடக்கப் பள்ளியில் பயிற்சி முகாம்

அரசு தொடக்கப் பள்ளியில் சாரண இயக்கம் தொடா்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. கோட்டுச்சேரி மேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்பாரத சாரண சாரணிய இயக்கத்தின் நீலப் பறவையினா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு

காரைக்காலில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-ஆவது நாள் உயிா்த்தெழும் தினத்தை, ஈஸ்டா் தினமாக கிறிஸ்தவ ம... மேலும் பார்க்க

காரைக்கால் கடலில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி

கடல்வாழ் உயிரினங்கள் பெருக்கத்துக்காக காரைக்கால் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தின் கடற்பகுதி சுமாா் 20 கி.மீ. தொலைவு உடையது. இங்கு 10 கடலோ... மேலும் பார்க்க

படகில் தீ: படகு உரிமையாளருக்கு அமைச்சா் ஆறுதல்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு தீப்பிடித்து சேதமடைந்த நிலையில், அந்தப் படகை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். கிளிஞ்சல்மேடு பகுதியை சோ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் திரளானோா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் வருகை த... மேலும் பார்க்க