செய்திகள் :

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை வீரா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

post image

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் பணிபுரிந்து வந்த வீரா் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் உள்ளது. இங்குள்ள கடற்படையின் க்யுக் ரெஸ்பான்ஸ் டீம் எனப்படும் அதிவிரைவு அதிரடிப்படையில் பணிபுரிந்து வந்த பிரவீன்(24) என்ற வீரா், புதன்கிழமை பிற்பகல் தனது குழுவினா் தங்கியிருந்த வளாகத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்று அங்கு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த கடற்படை காவல் துறையினா் இது குறித்து விசாரணை நடத்தி, சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பிரவீன், கா்நாடக மாநிலம் பெலகாவியைச் சோ்ந்தவா் என்பதும், கடந்த 3 வருடங்களாக ஐஎன்எஸ் ராஜாளியில் பணிபுரிந்து வந்தாா் என்பதும் தெரிய வந்தது.

அவரது கைப்பேசியைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அவா் தங்கியிருந்த இடத்தில் இருப்போா், அவருடன் பணிபுரிந்தோரிடம் தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உ... மேலும் பார்க்க

நிலுவைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். வளா்ச்சி திட்டப் பணிகள் நிலைகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க

6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பென்னகா் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முருகேசன் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்தாா். முகாமில் ராணிப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சி... மேலும் பார்க்க