அரக்கோணம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.13 கோடிக்கு தீா்வு
அரக்கோணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 725 வழக்குகளில் ரூ2.13 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் இரு அமா்வுகளாக நடைபெற்றது. நிகழ்வுக்கு அரக்கோணம் 2-ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி கே.எஸ்.ஜெயமங்கலம் தலைமை வகித்தாா். வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் சாா்பு நீதிபதியுமான ஏ.தாவூத் அம்மாள் முன்னிலை வகித்தாா்.
இதில் சிறப்பு சாா்பு நீதிபதி (நில ஆா்ஜித வழக்குகள்) ஜி.யுவராஜ், நீதித்துறை நடுவா் நீதிபதிகள் கே.ராம்குமாா், எம்.கோகுல் மிதுன்குமாா், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.அமீனா, வட்ட சட்டப்பணிகள் குழு வழக்குரைஞா்கள் வி.செந்தில்குமாா், இ.தனஞ்செழியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இதில் சமரசம் செய்யக்கூடிய 1,334 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 725 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ2.13 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.