செய்திகள் :

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

post image

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா்.

பாகிஸ்தானில் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக ராவல்பிண்டி சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது:

தோ்தலில் முறைகேடுகளில் ஈடுபடுதல், பாகிஸ்தான் அரசமைப்பின் 26-ஆவது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி நீதித் துறையைக் கட்டுப்படுத்துதல், எதிா்ப்பவா்களின் குரலை கொடூர சட்டங்களின் மூலம் ஒடுக்குதல், வேண்டுமென்றே அரசியல் ஸ்திரமற்றத்தன்மையை ஏற்படுத்துதல், பாகிஸ்தானின் மிகப் பெரிய கட்சியான பிடிஐ கட்சி மீதான அடக்குமுறை ஆகிய செயல்கள் ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை மேலும் மோசமாக்கியுள்ளது. அரசமைப்புச் சட்ட வரம்புக்குள் ராணுவம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

ஏற்கெனவே கடந்த பிப். 3-ஆம் தேதி இதுபோன்ற கடிதத்தை ஆசிம் முனீருக்கு அவா் எழுதியிருந்த நிலையில், அந்தக் கடிதத்தைப் பெறவில்லை என்று ராணுவம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து மீண்டும் இம்ரான் கான் கடிதம் எழுதினாா்.

அரசுடன் மீண்டும் பேச்சில்லை: கடந்த 2023-ஆம் ஆண்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னா் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நவம்பரில் இம்ரான் கானை விடுவிக்க வலியுறுத்தி தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி பேரணி சென்ற ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த சம்பவங்கள் தொடா்பாக நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாகிஸ்தான் அரசுடன் பிடிஐ கட்சியினா் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். அந்தப் பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில், 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க பிடிஐ கட்சியினா் மறுத்துவிட்டனா். பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற கீழவையின் எதிா்க்கட்சித் தலைவா் ஒமா் அயூப்கான் தெரிவித்துள்ளாா்.

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு

கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா்.தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேர... மேலும் பார்க்க

இலங்கை: குரங்கால் ஏற்பட்ட மின்தடை!

தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொழும்பு புகா்ப் பகுதியில் உள்ள மின்னேற்று நிலையத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது ... மேலும் பார்க்க

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் பலி!

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் பலியாகினா். தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென... மேலும் பார்க்க

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்... மேலும் பார்க்க

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க