செய்திகள் :

அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

post image

ஆண்டவன் பெயரால் அரசியல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு இன்று(பிப். 3) பேசியபோது, “திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்றுவரை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2,504 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தி முடிக்க திட்டம் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ஆண்டவன் பெயரால் அரசியல் செய்வோரிடையே, அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! சிறப்புறப் பணியாற்றிடும் பி. கே. சேகர் பாபு மற்றும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையை வாழ்த்துகிறேன்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வேலூா், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது நிருபா் புதுதில்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் நெய்வேலி மற்றும் வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை... மேலும் பார்க்க

எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடன் தள்ளுபடி

சென்னை: ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

சென்னை: மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

இறுதிக் கட்டத்தில் எழும்பூா், மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள்: கௌசல் கிஷோா்

சென்னை: சென்னை எழும்பூா், மதுரை ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா். இது குறித்து சென்னையில் அவா் செய்திய... மேலும் பார்க்க

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை திரும்பப் பெற உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

புது தில்லி: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.ஆா். ஜெய சுகின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கி... மேலும் பார்க்க

பருவ கால தொற்று மருந்துகள்: ஆண்டு முழுவதும் இருப்பு வைக்க நடவடிக்கை

சென்னை: பருவ கால நோய்கள் வழக்கத்துக்கு மாறாக ஆண்டு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், அவற்றுக்கான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, ம... மேலும் பார்க்க