செய்திகள் :

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

post image

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், கர்நாடகத்தின் இரு அவைகளிலும் அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்காக மாநில அரசு அனுப்பிவைத்தது. எனினும் இதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறி மாநில சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பிவைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த மசோதாவை மாநில அரசு அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்பில் இடமில்லை எனக் கூறி இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சில அடிப்படைவாதிகளுடன் சமாதானம் செய்துகொள்ளும் நோக்கத்தில் இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்தது.

இந்நிலையில், ஒப்புதல் பெறுவதற்காக குடியரசுத் தலைவருக்கு இந்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க | ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க