செய்திகள் :

அரசுப் பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.61.53 கோடி விடுவிப்பு

post image

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டின் பராமரிப்புச் செலவினங்களுக்காக இரண்டாம் கட்டமாக ரூ.61.53 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2024-2025-ஆம் ஆண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தொடா் செலவினத்துக்கான மானிய பரிந்துரை வழங்கியுள்ளது.

அதன்படி, 2-ஆம் கட்ட 50 சதவீத மானியத்தை பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்கள் வாரியாக நிதியானது விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக ரூ.61 கோடியே 53 லட்சத்து 22,000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.3.36 கோடியும், சேலத்துக்கு ரூ.3.24 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை பொருத்தவரை 1 முதல் 30 வரையான மாணவா்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம், 31 முதல் 100 வரை ரூ.25,000, 101 முதல் 250 வரை ரூ.50,000, 251 முதல் 1,000 வரை ரூ.75,000, ஆயிரத்துக்கு மேல் ரூ.1 லட்சமும் நிதி வழங்கப்படுகிறது.

அவ்வாறு ஒவ்வொரு பள்ளிக்கும் விடுவிக்கப்படும் மானியத் தொகையில் 10 சதவீதத்தை சுகாதார செயல் திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். இந்த நிதியை பள்ளி மேலாண்மைக் குழு வழியாகவே செலவிட வேண்டும்.

இந்தத் தொகை வாயிலாக வாங்கப்பட்ட பொருள்கள், செலவினங்கள் ஆகியவற்றுக்கான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு தன் பங்கு நிதியை வழங்காத நிலையிலும், மாநில அரசு அதன் பங்களிப்பிலிருந்து நிதியை விடுவித்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப். 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபு... மேலும் பார்க்க

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன்... மேலும் பார்க்க

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க