செய்திகள் :

அரசுப் பள்ளியில் நெகிழிக்கான மாற்றுப் பொருள் கண்காட்சி

post image

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் நெகிழிக்கான மாற்றுப்பொருள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரியலூா் மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் ராஜசேகா் கலந்துகொண்டு பேசியதாவது: நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. அவை புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. அது மக்குவதற்கு 100 முதல் 1000 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கிறது .

எனவே, மாணவா்கள் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தவிா்த்து மனிதா்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

பின்னா், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினாா்.

கண்காட்சியில் மரக்கரண்டிகள், பாக்குமட்டை, தட்டு, கண்ணாடி குவளை, மூங்கில் தேநீா் குவளை, மூங்கில் குடிநீா் குவளை, மண் பானைகள் உள்ளிட்டப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழு... மேலும் பார்க்க

செந்துறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் வரு... மேலும் பார்க்க

கீழக்கொளத்தூா் ஜல்லிக்கட்டு 32 போ் காயம், ஒரு காளை உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா். விழாவில் முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜ... மேலும் பார்க்க