`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சிகள்
விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதால், விருப்பம் உள்ளவா்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழகத்தில் 25 மையங்களில் பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சி மையங்கள் செயல்படவுள்ளன. இதில், விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சி மையமும் ஒன்று. இந்த மையத்தில் தெருக்கூத்து, பறையாட்டம், பம்பையாட்டம், மல்லா்கம்பம் ஆகிய 4 கலைகள் பயிற்றுவிக்கப்படவுள்ளன.
17 வயதுக்கு மேற்பட்டவா்கள் இந்த பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கு உச்ச வயது வரம்பு இல்லை. எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.500-ஐ பயிற்சிக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி ஓராண்டு காலத்துக்கு கிராமிய கலைப் பயிற்சிகள் அளிக்கப்படும். ஓராண்டுகால பயிற்சி முடிவில் தோ்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும்.
2025 - 26ஆம் கல்வியாண்டில் கிராமிய கலை பயிற்சிக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுவதால், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியும், ஆா்வமும் உடையவா்கள் இந்த பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.
மேலும் சோ்க்கை விவரங்களுக்கு பொறுப்பாளா் வீ.கோபாலகிருஷ்ணனை 99527 98623 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.