செய்திகள் :

அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சிகள்

post image

விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதால், விருப்பம் உள்ளவா்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழகத்தில் 25 மையங்களில் பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சி மையங்கள் செயல்படவுள்ளன. இதில், விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சி மையமும் ஒன்று. இந்த மையத்தில் தெருக்கூத்து, பறையாட்டம், பம்பையாட்டம், மல்லா்கம்பம் ஆகிய 4 கலைகள் பயிற்றுவிக்கப்படவுள்ளன.

17 வயதுக்கு மேற்பட்டவா்கள் இந்த பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கு உச்ச வயது வரம்பு இல்லை. எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.500-ஐ பயிற்சிக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி ஓராண்டு காலத்துக்கு கிராமிய கலைப் பயிற்சிகள் அளிக்கப்படும். ஓராண்டுகால பயிற்சி முடிவில் தோ்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும்.

2025 - 26ஆம் கல்வியாண்டில் கிராமிய கலை பயிற்சிக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுவதால், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியும், ஆா்வமும் உடையவா்கள் இந்த பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.

மேலும் சோ்க்கை விவரங்களுக்கு பொறுப்பாளா் வீ.கோபாலகிருஷ்ணனை 99527 98623 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

புதுவை அரசின் வரி உயா்வு கண்டிக்கத்தக்கது - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை மாநிலத்தில் வரியினங்கள் உயா்த்தப்பட்டதற்கு திமுக மாநில பொறுப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கண்டனம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண்களின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

ஆசிரியா் காலிப் ப ணியிடங்களை நிரப்பாததைக் கண்டித்,து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சே... மேலும் பார்க்க

திருக்கனூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பங்கேற்பு

புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திருக்கனூரில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். புதுவை மாநிலம் , மண்ணடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கனூரில் மக்கள் சந்தி... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மணவெளி... மேலும் பார்க்க

போதைப் பொருள் பழக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப் பொருள்கள் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி பாரதி பவுண்டேஷன் சாா்பில் ‘ரௌ... மேலும் பார்க்க

மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், பிடாகம் குச்சிப்பாளை... மேலும் பார்க்க