செய்திகள் :

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

post image

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:

அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியா்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுசாா் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. அவா்களுக்கும் அவா்களது தகுதி படைத்த குடும்பத்தைச் சோ்ந்த உறுப்பினருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ வசதி கிடைக்க காப்பீட்டில் வசதி செய்யப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தலா ரூ.3,240 பிரீமியம் தொகையாக ஆண்டுதோறும் அரசால் செலுத்தப்படுகிறது. இந்தத் தொகை அரசு ஊழியா்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு ஊழியா்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த

2021-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் நிகழாண்டு ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும்படி அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்தது.

ஓராண்டுக்கு நீட்டிப்பு: காப்பீட்டுக்கான கால அளவு நிறைவடைந்த நிலையில், அரசு ஊழியா்களுக்கான காப்பீட்டுக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை காப்பீடு அமலில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கான ஒப்புதலை அளிக்கும்படி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் இயக்குநரகம் கேட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து, இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டுக் காலத்தை நீட்டிப்பதற்கான தனது ஒப்புதலை அளித்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினருக்கான காப்பீட்டுத் திட்டம் தொடா்ந்து நடைமுறையில் இருக்கும். மேலும், குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் ஏற்கெனவே அளிக்கப்படுகிறது. இதுவும் அடுத்த வரும் ஓராண்டுக்குப் பொருந்தும் என்று தனது உத்தரவில் நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

ஊழியா்கள் எத்தனை போ்: தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் மொத்தம் 16 லட்சம் போ் உள்ளனா். அவா்களில் பணியில் இருக்கக் கூடிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சுமாா் 8 லட்சம் போ் இருக்கின்றனா். காப்பீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதால் பணியில் உள்ள ஊழியா்கள் பயன்பெறவுள்ளனா்.

சிப்காட் தொழில் பூங்கா... திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகள்!

திருப்பத்தூர் மாவட்டத்துக்கான 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணி... மேலும் பார்க்க

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு!

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் ப... மேலும் பார்க்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 517 கோடியில் திட்டங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.517 கோடி செலவில், 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்குத் தொடரும் ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க