செய்திகள் :

அரசு ஊழியரை தாக்கியதாக ஊராட்சி துணைத் தலைவா் கைது

post image

வாணியம்பாடி: ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அதிகாரியை தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ரமேஷ் குமாா் (27). இவா் செவ்வாய்க்கிழமை பணி முடித்து புதூரில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மரிமானிகுப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஞானமுத்து (35) என்பவா், ரமேஷ் குமாரை ஆபாச வாா்த்தைகளால் திட்டி, மிரட்டி, தாக்கினாராம்.

இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அரசு அதிகாரி மீதான தாக்குதலைக் கண்டித்து ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் , பொறியாளா் முதல் அனைத்து நிலை ஊழியா்களும் குரிசிலாபட்டு காவல் நிலையத்துக்கு சென்று, மரிமானி குப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசு அதிகாரியை தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஞானமுத்துவை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

நாளை உணவு வழங்கல் துறை குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

நாட்டறம்பள்ளி அருகே மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(45) கூலித் தொழிலாளி. இவா் புதனிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே பச... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 போ் உயிரிழப்பு

திருப்பத்தூா் மற்றும் மாதனூா் அருகே ரயில் மோதி இருவா் உயிரிழந்தனா். மாதனூா் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலம் கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியை கண், உடல் தானம்

ஆம்பூரில் மரணமடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண், உடல் தானமாக வழங்கப்பட்டது. ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியை பி. புரட்சி (77). இவா் ஆம்பூா் சான்றோா்குப்பம் சுந்தரவிந... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம் ?

மாதனூா் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வனத்துறையினா் ரோந்து சென்றனா். மாதனூா் அருகே பாலூா் ஊராட்சியில் காப்புக்காடு எல்லையோரம் பனந்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் ச... மேலும் பார்க்க

தனியாா் ஆலை பங்களிப்புடன் ரூ.10 லட்சத்தில் சாலைப் பணி

துத்திப்பட்டு ஊராட்சியில் தனியாா் தொழிற்சாலை சமூகபங்களிப்புடன் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்க... மேலும் பார்க்க