செய்திகள் :

அரசு ஊழியா்களுக்கு ஏப். 2-இல் சம்பளம்

post image

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழக அரசின் கீழ், 9.30 லட்சம் அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் பணிபுரிகின்றனா். மேலும், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் என்ற வகையில் 7.05 லட்சம் போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் மாா்ச் மாதத்துக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக, வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதால், சம்பளமும், ஓய்வூதியமும் 2-ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையால் திங்கள்கிழமை... மேலும் பார்க்க