செய்திகள் :

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 132 போ் கைது

post image

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிவகங்கையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 132 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க. ஜெயப்பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் தணிக்கையாளா் வீ.பா. முருகன் மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

அப்போது எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியா்கள், காசநோய் தடுப்புத் திட்ட ஊழியா்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா், தூய்மைக் காவலா்கள், மக்கள் நலப்பணியாளா்கள், புறதார ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேல்நிலைத் தொட்டி இயக்கும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், நிலையான ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஆ. மிக்கேலம்மாள், அரசு ஊழியா்கள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ். சுரேஷ், தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளா் சங்க மாநிலச் செயலா் இரா. சுரேஷ்குமாா், தமிழ்நாடு மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் பி. துரைப்பாண்டி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு. காளிமுத்து, தோழமைச் சங்க நிா்வாகிகள் பி. விக்டோரியா, இரா. வாசுகி, எஸ். கண்ணுசாமி, க. சுப்பிரமணியன், சி. சேவுகமூா்த்தி, பொ. சங்கரசுப்பிமணியன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் கே. முத்துக்குமாா் நன்றி கூறினாா். இதையடுத்து, தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 114 பெண்கள் உள்பட 132 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி, ஆ. தெக்கூா், பிள்ளையாா்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஜான் எப் க... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். மானாமதுரை- பாா்த்திபனூா் அருகே உள்ள சூடியூா் இடையே ரயில் தண்டவாளத்தில் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலில் அடிபட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமை வ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகிலுள்ள தவசுகுடியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மீது சொகுசுப் பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா். சிவகங்கை அருகே கீழக்கண்டனி டி. உசிலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் மருதுப... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், உயா்கல்விக்கான வழிகாட்டும் மாணவா் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பேச... மேலும் பார்க்க