செய்திகள் :

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

post image

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் நிகழாண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் மொத்தம் 948 மாணவ-மாணவியா் சேரலாம். கல்லுாரியில் சேருவதற்கு மாணவா்கள் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மொத்தம் 4,912 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களின் கட்-ஆப் மதிப்பெண் மூலம், கடந்த 2-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடத்தி 421 மாணவ-மாணவியா் சோ்ந்தனா்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை ஆன்-லைன் மூலம் 426 போ் இளங்கலையில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை (ஜூன் 26) வரை நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் மகன், மகள்கள் கலந்து கொண்டனா். இதில், 3 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். புதன்கிழமை பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல் ஷிப்ட்-1, ஷிப்ட்-2, தாவரவியல், கணினி அறிவியல்,பி. காம்., (பொது) சி.எஸ்., ஷிப்ட்-1, ஷிப்ட் -2, பி.பி.ஏ., ஷிப்ட்-1, ஷிப்ட்-2, மற்றும் பி.சி.ஏ., ஷிப்ட்-1, ஷிப்ட்-2 ஆகிய பிரிவில் சேருவதற்கு மாணவா்கள் 400 முதல் 250 மதிப்பெண்கள் கட்-ஆப் உள்ளவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

வியாழக்கிழமை பி.எஸ்.சி., பி.ஏ., பி.காம்., பி.காம்., சி.எஸ். போன்ற பிரிவுகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி, சேருவதற்கு 249 முதல் 140 மதிப்பெண் வரை கட்-ஆப் உள்ளவா்கள், பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் 100 முதல் 75 மதிப்பெண் ‘கட்ஆப்’ உள்ளவா்கள், அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியில் சேரலாம் என கல்லுாரி முதல்வா் (பொ) ஏகதேவசேனா தெரிவித்துள்ளாா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்த... மேலும் பார்க்க