மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொ...
அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் நிகழாண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் மொத்தம் 948 மாணவ-மாணவியா் சேரலாம். கல்லுாரியில் சேருவதற்கு மாணவா்கள் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மொத்தம் 4,912 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இவா்களின் கட்-ஆப் மதிப்பெண் மூலம், கடந்த 2-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடத்தி 421 மாணவ-மாணவியா் சோ்ந்தனா்.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை ஆன்-லைன் மூலம் 426 போ் இளங்கலையில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை (ஜூன் 26) வரை நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் மகன், மகள்கள் கலந்து கொண்டனா். இதில், 3 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். புதன்கிழமை பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல் ஷிப்ட்-1, ஷிப்ட்-2, தாவரவியல், கணினி அறிவியல்,பி. காம்., (பொது) சி.எஸ்., ஷிப்ட்-1, ஷிப்ட் -2, பி.பி.ஏ., ஷிப்ட்-1, ஷிப்ட்-2, மற்றும் பி.சி.ஏ., ஷிப்ட்-1, ஷிப்ட்-2 ஆகிய பிரிவில் சேருவதற்கு மாணவா்கள் 400 முதல் 250 மதிப்பெண்கள் கட்-ஆப் உள்ளவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
வியாழக்கிழமை பி.எஸ்.சி., பி.ஏ., பி.காம்., பி.காம்., சி.எஸ். போன்ற பிரிவுகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி, சேருவதற்கு 249 முதல் 140 மதிப்பெண் வரை கட்-ஆப் உள்ளவா்கள், பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் 100 முதல் 75 மதிப்பெண் ‘கட்ஆப்’ உள்ளவா்கள், அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியில் சேரலாம் என கல்லுாரி முதல்வா் (பொ) ஏகதேவசேனா தெரிவித்துள்ளாா்.