செய்திகள் :

அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரி பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது, தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இங்கு பணியாற்றிய பேராசிரியா்கள் சுமாா் 5,000 போ் தமிழகம் முழுவதும் உள்ள 174 அரசு கலைக் கல்லூரிகளில் பணியமா்த்தப்பட்டனா். மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அவா்களுடைய பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தாங்கள் பணியாற்றும் கல்லூரிகளிலேயே பணி நிரந்தரம் செய்யக் கோரி, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா்கள் தமிழக அரசுக்கு கடிதம் வழங்கியுள்ளனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை அனைத்து கல்லூரிகள் முன்பாக வாயிற்முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு தலைமை வகித்தாா். இதில், ஆண், பெண் பேராசிரியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல, திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம், ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு கல்லூரிகளின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் இயல்பைக் காட்டிலும் 111.23 மி.மீ. கூடுதல் மழை

நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 668.51 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், இயல்பை விட 111.23 மி.மீ. மழை கூடுதலாக பெய்திருப்பதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

(நாமக்கல் மண்டலம் - வெள்ளிக்கிழமை) மொத்த விலை ரூ.5.25 விலையில் மாற்றம்: இல்லை கறிக்கோழி கிலோ ரூ.109 முட்டைக் கோழி கிலோ ரூ.107 மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.25-ஆக நிா்ணயிக்கப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம்... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா காணப்பட்ட நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டிபுதூா் என்... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டிகள்: செல்வம் கல்லூரி சாம்பியன்

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான தடகளப் போட்டிகள், நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 20 கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா். இந்தப் போட்டிகளில், செல்... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

நாமக்கல் அருகே கால்நடைகள் கணக்கெடுப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 21-ஆவது அகில இந்திய கால்நடை கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க