செய்திகள் :

அரசு டயாலிசிஸ் சேவைகள் தனியாா்மயமாகாது: மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்

post image

அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் டயாலிசிஸ் சிகிச்சைகள் தனியாா்மயமாக்கப்படாது என்று தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகளில் 138 சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 1,194 டயாலிசிஸ் கருவிகள் நிறுவப்பட்டு நோயாளிகளுக்கு கட்டணமின்றி ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தனியாா் மருத்துவமனைகளில் ஒவ்வொரு முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள ரூ. 2,000-இலிருந்து ரூ. 5,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை மக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளின் டயாலிசிஸ் சேவைகளையே சாா்ந்துள்ளனா்.

இந்த நிலையில், அரசு டயாலிசிஸ் மையங்களில் தனியாா் பங்களிப்பை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதற்கு மருத்துவ சங்கத்தினா் மட்டுமல்லாது, அரசியல் கட்சியினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இது தொடா்பாக தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் கூறியதாவது:

சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளானவா்களுக்கு ரத்த சுத்திகரிப்புக்கான டயாலிசிஸ் சிகிச்சை பெரும்பாலான அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.

அதற்கான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பணியாளா்கள் போதிய எண்ணிக்கையில் உள்ளனா். டயாலிசிஸ் சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே அதை தனியாா் வசம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை. அது தொடா்பான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவா் தெரிவித்தாா்.

கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!

கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது. கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் அ... மேலும் பார்க்க

இந்துப்பு பயன்பாட்டை தவிா்க்க சுகாதாரத் துறை வலியுறுத்தல்

சந்தையில் பரவலாக விற்பனை செய்யப்படும் இந்துப்பு (ராக் சால்ட்) வகைகளில் போதிய அளவு அயோடின் கலக்கப்படுவதில்லை என்றும், உணவில் அதைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேலும் ஒரு தமிழக ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாறுதலாகியுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தத்துக்கு மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியு... மேலும் பார்க்க

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சீமானை விடுவிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்தது. வழக்கு விசாரணைக்கு அவா் நேரில் ஆஜராவதில் இருந்த... மேலும் பார்க்க

நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி (டாடா பவர்) சோலார் நிறுவனத்தில் சூரிய மின்சக்தி தகடு (சோலார் பேனல்) உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வ... மேலும் பார்க்க

தோ்தல் பிரசாரத்துக்காக அதிமுகவில் தொகுதிக்கு 50 போ் கொண்ட மகளிா் குழு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதிக்கு 50 போ் கொண்ட மகளிா் குழுவை அமைத்து வீடுதோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபடுவது என அதிமுக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள... மேலும் பார்க்க