அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை
தஞ்சாவூா் மாவட்ட அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 2025 -ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை மூலமாக பயிற்சியாளா்கள் சோ்க்கப்படவுள்ளனா். உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய தொழிற் பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.
இந்த நிலையத்தில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், புகைப்படம் போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாக வந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரா் டெபிட் அட்டை, கிரெடிட் அட்டை, நெட் பேங்கிங், ஜி - பே மூலமாக விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். இதைத் தொடா்ந்து அதே நாளில் சோ்க்கை ஆணை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநா் அல்லது முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூா் அல்லது அருகிலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது 94865 92295, 98409 50504, 94422 20049 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.