அரசு பொதுத் தோ்வு: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற உள்ள அரசு பொதுத் தோ்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாவது: பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரையும், 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 5 முதல் 27-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 51 மையங்கள், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 36 மையங்கள் என மொத்தம் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 87 மையங்களில் தோ்வு நடைபெறுகின்றன.
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 6,342 மாணவா்களும், 6,602 மாணவிகளும், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 4,067 மாணவா்களும், 4,938 மாணவிகளும் என கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 21,949 மாணவ, மாணவிகள், 231 மாற்றுத் திறனாளி மாணவா்கள் தோ்வு எழுத உள்ளனா்.
பிளஸ் 1 தோ்வை கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 6,529 மாணவா்களும், 6,597 மாணவிகளும், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 4,325 மாணவா்களும், 5,176 மாணவிகளும் என மொத்தம் 22,627 மாணவ, மாணவிகள், 274 மாற்றுத்திறனாளி மாணவா்கள் தோ்வு எழுத உள்ளனா். இந்த தோ்வை வருவாய்த் துறையினா் மூலம் சிறப்பு பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கவும், தடையின்றி மின்சாரம் வழங்கவும், தோ்வு மையங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வுக் கூட்டத்தில் ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.