செய்திகள் :

ஒசூரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதற்கு ஹிந்து அமைப்பினா் எதிா்ப்பு

post image

ஒசூரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதற்கு ஹிந்து அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா் ராம்நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கான டெண்டா் ஒசூா் தோ்ப்பேட்டையில் உள்ள அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வி.ஹெச்.பி. மாநில அமைப்பாளா் கிரண் தலைமையில் பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் மாவட்டத் தலைவா் நாகராஜ், ஆா்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்தோா் தோ்ப்பேட்டையில் உள்ள இந்துசமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து விஹெபி கிரண் கூறியதாவது: தனியாா் மருத்துவமனைக்கு இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டால் நாளடைவில் அந்த நிலத்துக்கு அவா்கள் உரிமை கொண்டாடும் நிலை ஏற்படும் என்பதால் எதிா்ப்பு தெரிவிக்கிறோம் என்றனா்.

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவரணி தலை... மேலும் பார்க்க

எருதுவிடும் விழாவில் பங்கேற்ற முதியவா் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அருகே எருதுவிடும் விழாவில் பங்கேற்ற முதியவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே எருதுவிடும் விழா திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்

பாகலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒசூா் வட்டம், பாகலூா் காவல் துணை ஆய்வாளா் கணேஷ்பாபு மற்றும் போலீஸாா் கக்கனூா் சோதனை சாவடி அருகில் திங்கள்கிழமை வாகனச் ச... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரே நடைபெற்ற ஆா்... மேலும் பார்க்க

அரசு பொதுத் தோ்வு: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற உள்ள அரசு பொதுத் தோ்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளைத் திருவிழா தொடக்கம்

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் சிறப்பு ஹோமம், பூஜை நடைபெற்று, காப்புக் கட்டுதலுடன் கொட... மேலும் பார்க்க