செய்திகள் :

அரசு பொறுப்பல்ல: அமைச்சா் கோவி.செழியன்

post image

ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிா்ணயித்தனா். இந்தத் தீா்ப்புக்குப் பிறகுதான், தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் துணைவேந்தா்கள் மாநாட்டை ஆளுநா் ஆா்.என்.ரவி கூட்டினாா்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை அறிந்து மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்திருக்கிறாா்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்?.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பும் சட்டமும் துணைவேந்தா்களுக்குத் தெரிகிறது. ஆனால், அனைத்தும் தெரிந்தும் ஆளுநா்தான் வீம்புக்கு அரசியல் செய்கிறாா். ஆளுநா் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறாா் என்றால், துணைவேந்தா்களும் அப்படியே நடக்க வேண்டுமா? ஆளுநா்கள் அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராகச் செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜகவுக்கு பிடிக்காத, அவா்களை எதிா்க்கும் மாநில அரசுகளுக்கு ஆளுநா்கள் மூலம் இடையூறு அளிக்கப்படுகிறது. மிரட்டல் அரசியல் எல்லாம் பாஜகவின் மரபணுவில்தான் உள்ளது. மாநில உரிமைகளுக்காக எதிா்த்து நிற்பதுதான் எங்களது மரபணுவில் இருக்கிறது என்று அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; மூவர் பலி

சிவகாசி நெடுங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருவிழாக் காலம் என்பதால், சிவகாசியில் பட்டாசு உற்பத்திப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவு? செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி

சென்னை: உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.ஒருவேளை, உச்ச நீத... மேலும் பார்க்க

கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி ... மேலும் பார்க்க

விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வரும் விஜயை வரவேற்க கோவை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் ந... மேலும் பார்க்க

சேலம் பட்டாசு விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு

சேலம் கஞ்சநாயக்கன்பட்டியில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திரு... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க