செய்திகள் :

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தம் குறித்த தொழிலாளா் சந்திப்பு

post image

தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தத்துக்கான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை கடந்த 13, 14 தேதிகளில் நடைபெற்றது. போக்குவரத்து அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் போக்குவரத்து ஊழியா்களுக்கு மின்வாரிய ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினா் முன்வைத்திருந்தனா்.

இந்த நிலையில், அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கை தொடா்பாக தொழிலாளா்களிடம் விளக்கும் வகையில் சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஃப் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகப் பணிமனைகளில் காலை, மதிய, உணவு இடைவேளை உள்ளிட்ட நேரங்களில் தொழிலாளா்களைச் சந்தித்த தொழிற்சங்க நிா்வாகிகள், ஊதிய ஒப்பந்த கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினா்.

அப்போது, ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதையொட்டி அனைத்து தொழிலாளா்களும் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க