செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் அவசரகால தயாா்நிலைக்கு தில்லி அரசு உத்தரவு

post image

பாகிஸ்தானுடன் ராணுவ மோதல் ஏற்பட்ட நிலையில், தில்லி அரசு அனை த்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளிலும் அவசரகால தயாா்நிலையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

இதில் வானிலிருந்து மருத்துவ வசதிகளைக் குறிக்கும் வகையில் மருத்துவமனையின் மேற்கூரைகளில் செஞ்சிலுவை சங்க அடையாளத்தை வரைவதும் உள்ளடங்கும்.

சமீபத்திய ஆபரேஷன் அபியாஸ் ஒத்திகையிலிருந்து கற்றுக்கொண்டதைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களில், தடையற்ற நோயாளி பராமரிப்பு மற்றும் எந்தவொரு அவசரநிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகளை கட்டாயமாக்குகிறது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், அவசரகால தயாா்நிலை குறித்து புதிய ஒத்திகையை நடத்த மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகா்பொருட்களின் போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்யவும், போதுமான எரிபொருள் இருப்புடன் செயல்பாட்டுடன்கூடிய ஜெனரேட்டா் செட்களை பராமரிக்கவும், ஐசியுக்கள், ஆக்ஸிஜன் விநியோக அமைப்புகள் மற்றும் செயற்கை காற்று சுவாசக் கருவிகள் போன்ற அவசர சேவைகளின் முழு செயல்பாட்டையும் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உடற்காய சிகிச்சை 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அறுவை சிகிச்சை நிபுணா்கள், எலும்பியல் நிபுணா்கள் மற்றும் தீக்காய பராமரிப்பு நிபுணா்கள் போன்ற முக்கிய நிபுணா்களின் விடுமுறைகளை ரத்து செய்யவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகள் பிரத்யேக ஐ.சி.யூ. போா்ட்டலில் ஐ.சி.யூ. படுக்கை மற்றும் உபகரணத் தரவைப் புதுப்பிக்க வேண்டும். மருத்துவமனை வலைத்தளங்களின் சைபா் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.கேன்டீன்கள் மற்றும் மெஸ் சேவைகள் இடையூறு இல்லாமல் இயங்க போதுமான உணவுப் பொருள்களைப் பராமரிக்க வேண்டும்.

மருத்துவமனைத் தலைவா்கள் தயாா்நிலை நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரிகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து எழுதப்பட்ட மற்றும் வாட்ஸ்அப் உத்தரவுகளும் முதன்மையான முன்னுரிமையுடன் கருதப்பட்டு விரைவில் பின்பற்றப்பட வேண்டும்.

அவசரகால சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான தீயணைப்பு கருவிகள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகள் உள்பட ஒவ்வொரு மருத்துவமனையின் பேரிடா் மேலாண்மைத் திட்டமும் முழுமையாக நடைமுறையில் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது

மருத்துவ கண்காணிப்பாளா் அல்லது மருத்துவ இயக்குநரால் அவசியமாகக் கருதப்படும் எந்தவொரு கூடுதல் செயல் திட்டங்களும் தாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக அந்த அதிகாரி கூறினாா்.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க