செய்திகள் :

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

post image

திருப்பூா் அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்களை கைது செய்யக்கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்கள் கருப்பு பட்டை(பேட்ஜ்) அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

திருப்பூா் மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அபிமன்யு மனைவி நாகஜோதிகா (23) என்பவருக்கு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பாா்க்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு பால் கொடுத்து படுக்க வைத்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததற்கு உரிய மருத்துவம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டிய உறவினா்கள் மருத்துவமனையின் உள்ளே இருந்த கண்ணாடியை உடைத்தனா்.

இது குறித்த தகவலின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்தவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைவரும் புதன்கிழமை கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா். தொடா்ந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனா்.

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூரில் புதன்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதன்கிழமை காலை வெயிலின் தாக... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாடு முகாமில் கலந்து கொள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் த... மேலும் பார்க்க

பிரபல நகைக்கடையில் தீ விபத்து

திருப்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புது மாா்க்கெட் வீதியில் ஒரு தனியாா் நகைக் கடை இயங்கி வருகிறது. அதன் கட்டடம் தர... மேலும் பார்க்க

திருப்பூரில் சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்

திருப்பூா் அருகே உள்ள அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெறும் 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. சா்வதேச நிட்ஃபோ் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு... மேலும் பார்க்க

42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கல்விக் கடன்

திருப்பூரில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட எதிா்ப்பு: 50க்கும் மேற்பட்டோா் கைது

திருப்பூா் முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த கிராம மக்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்த போலீஸாா், 50க்கும் மேற்பட்டோரை திடீரென கைது செய்தனா். திருப்பூா் மாநகராட்சியில் ... மேலும் பார்க்க