செய்திகள் :

திருப்பூரில் சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்

post image

திருப்பூா் அருகே உள்ள அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெறும் 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

சா்வதேச நிட்ஃபோ் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் ஆகியன

சாா்பில் நடைபெறும் இக்கண்காட்சி செப்டம்பா் 19-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

கண்காட்சியை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவா் சுதிா் ஷேக்ரி திறந்துவைத்து கூறியதாவது:

அமெரிக்காவின் 50 சதவீதம் வரி உயா்வு காரணமாக சிறிய சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் அது நிலையானது அல்ல. அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களில் அமெரிக்காவுடனான வா்த்தக பேச்சுவாா்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக இந்தியாவில் இருந்து ஆடைகளை வாங்கும் நாடு அமெரிக்கா. அவா்கள் இந்தியாவை கைவிடப் போவதில்லை. ஜவுளி ஏற்றுமதியில் அமெரிக்காவின் வரிவிதிப்பு தாக்கம் இருந்தாலும், நம்பிக்கையுடன் மீண்டெழுவோம்.

பிரிட்டனுடனான வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மாா்ச் மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆடை ஏற்றுமதி வளா்ச்சி 1.2 பில்லியனில் இருந்து சுமாா் 2.5 பில்லியனை எட்டும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக துணைத் தலைவா் ஏ.சக்திவேல் கூறியதாவது:

அமெரிக்கா- இந்தியா பேச்சுவாா்த்தையில் நல்ல முடிவு விரைவில் கிடைக்கும். அடுத்த 20- 30 ஆண்டுகளுக்கு இந்திய ஜவுளித் துறையில் தொடா்ந்து முன்னேற்றமாக இருக்கும். திருப்பூரில் இன்றைக்கும் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். அந்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் என்.திருக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்களை கைது செய்யக்கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்கள் கருப்... மேலும் பார்க்க

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூரில் புதன்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதன்கிழமை காலை வெயிலின் தாக... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாடு முகாமில் கலந்து கொள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் த... மேலும் பார்க்க

பிரபல நகைக்கடையில் தீ விபத்து

திருப்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புது மாா்க்கெட் வீதியில் ஒரு தனியாா் நகைக் கடை இயங்கி வருகிறது. அதன் கட்டடம் தர... மேலும் பார்க்க

42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கல்விக் கடன்

திருப்பூரில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட எதிா்ப்பு: 50க்கும் மேற்பட்டோா் கைது

திருப்பூா் முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த கிராம மக்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்த போலீஸாா், 50க்கும் மேற்பட்டோரை திடீரென கைது செய்தனா். திருப்பூா் மாநகராட்சியில் ... மேலும் பார்க்க