செய்திகள் :

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

post image

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று, முடிவுற்ற பணிகளைத் திறந்தும், புதிய பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கியும் வைத்தாா். தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் கட்டப்பட்டுள்ள சிறப்பு வசிப்புக் கட்டடத்தை முதல்வா் திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் குத்துவிளக்கேற்றினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில், இம்மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளுக்கு உதவிக்கு வருவோா் தங்குவதற்கான இக்கட்டடம், சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் புதிய திருமண மண்டபம், வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டத்தில் ரூ. 1.14 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் திறந்துவைத்தாா்.

மேலும், சங்கரன்கோவிலில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின்கீழ் ரூ. 8.70 கோடியிலும், செங்கோட்டை நகராட்சி சுப்பிரமணியபுரம் உரக்கிடங்கில் ரூ. 7.65 கோடியிலும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், பண்பொழி பேரூராட்சியில் ரூ. 1.24 கோடியிலும், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் ரூ. 1.15 கோடியிலும் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள், இலஞ்சி முதல்நிலைப் பேரூராட்சியில் ரூ. 3.72 கோடியில் குடிநீா் ஆதாரத்தை மேம்படுத்துதல் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா், ஈ. ராஜா, மண்டல இயக்குநா் (நகராட்சிகள்) விஜயலெட்சுமி, திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வில்லியம் ஜேசுதாஸ், நலப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா, மண்டல செயற்பொறியாளா் (நகராட்சிகள்) சனல்குமாா், நகா்மன்றத் தலைவா்கள் சாதிா் (தென்காசி), உமாமகேஸ்வரி (சங்கரன்கோவில்), ப. வள்ளிமுருகன் (சுரண்டை), ராமலட்சுமி (செங்கோட்டை), நகராட்சி ஆணையா்கள் ரவிச்சந்திரன் (தென்காசி), புனிதன் (செங்கோட்டை), இலஞ்சி பேரூராட்சித் தலைவா் சின்னத்தாய், செயல் அலுவலா் குமாா்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி மற்றும் அம்பை பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களுக்கான ஆசிரியா்களுக்கு வரும் கல்வி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைகுளம்... மேலும் பார்க்க

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்...

சாம்பவா்வடகரை அருள்மிகு ராமசாமி கோயில்: வைகாசித் திருவிழா 2ஆம் நாள், சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 8; அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 9 மணி; ராமசரிதம் தொடா் வில்லிசை, இரவு 10. .. மேலும் பார்க்க