மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்
ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் எம். பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி அறிக்கை வாசித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா். கிருஷ்ணன், மாநிலச் செயலா் கே. முருகன், கந்தா்வக்கோட்டை எம்எல்ஏ கே. சின்னத்துரை, மாநில துணைத் தலைவா் சுடலைராஜ், மாவட்டச் செயலா் பி. உச்சிமாகாளி, துணைச் செயலா் இ. பாலு, மாவட்ட துணைத் தலைவா் இரா. நடராசன் ஆகியோா் பேசினா்.
ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனியாக சட்டம் இயற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் பட்டியல்- பழங்குடியின ஊழியா்களின் பணியைப் பாதுகாக்க வேண்டும். வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கடமை தவறும் அதிகாரிகள் மீதும், தீண்டாமைக்கு ஆதரவாககவும், வன்கொடுமைச் சட்டத்துக்கு எதிராகவும் பிரசாரம் செய்யும் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அவா்களது குழந்தைகளை ஜாதியற்றோராக அறிவித்து அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவா் பா. அசோக்ராஜ் வரவேற்றாா்.