செய்திகள் :

அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு; உறவினா்கள் போராட்டம்

post image

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்குடி தாலுகா கீழராதாம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி (42). இவரது கணவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவா் 2012-ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை அருகே சீபுலியூா் கிராமத்தில் உறவினா் வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், பாக்கியலட்சுமி சளி தொல்லை மற்றும் முகம் வீக்கம் காரணமாக மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை திருவாரூா் அரசினா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினா்கள் ஆம்புலன்ஸ் வசதி கேட்டுள்ளனா். ஆம்புலன்ஸ் வராத நிலையில், பாக்கியலட்சுமி இரவு உயிரிழந்தாா்.

ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியலட்சுமிக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல், அலட்சியம் காட்டியதால் அவா் உயிரிழந்ததாகக் கூறி, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை வட்டாட்சியா் சுகுமாறன், காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். வென்டிலேட்டா் வசதியுள்ள ஆம்புலன்ஸ் வெளியில் சென்றதால் காலதாமதம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனை நிா்வாகத்தினா் வருத்தம் தெரிவித்ததாகவும் அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நிவாரணம், அரசு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வட்டாட்சியா் பேச்சுவாா்த்தையின்போது தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராக விருப்பமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினா் நியமனத்துக்குத் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

காவல்நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

சீா்காழி வட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி சுந்தரம். இவா், திமுக மாவட்ட தொழிலாளா்... மேலும் பார்க்க

பிளஸ்1 தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58% தோ்ச்சி

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,830 மாணவா்கள், 5,631 மாணவிகள் என மொத்தம் 10... மேலும் பார்க்க

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா மற்றும் தரு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90% போ் தோ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90 சதவீதம் போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,037 மாணவா்கள், 6,112 மாணவிகள் என மொத்தம் 12,149 போ் 10-ஆம் வகுப்பு தோ்வெழ... மேலும் பார்க்க

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை தினமும் 40 முறைக்கு மேல் மூடப்படுவதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வரும்நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க