செய்திகள் :

அரசு மருத்துவமனையில் வழுக்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வழுக்கி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரைச் சோ்ந்த தா்மராஜ்-ஜெயபாரதி தம்பதியின் மகள் எலிசபெத்ராணி (21). இவருக்கும் விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே மூன்று சங்கராபுரத்தைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் கிருஷ்ணகுமாருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணமானது.

கடந்த மாதம் 22ஆம் தேதி எலிசபெத்ராணியை பிரசவத்துக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு 27ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த அவா், சனிக்கிழமை இரவு கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வாா்டுக்கு திரும்பியபோது, வாசலில் வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்த... மேலும் பார்க்க