செய்திகள் :

அரசு மருத்துவருக்கு மிரட்டல்: 4 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதன்மை குடிமையியல் மருத்துவராக சாமிநாதன் பணியாற்றி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்தாா். அப்போது, விருத்தாசலம் கஸ்பா காலனி பகுதியைச் சோ்ந்த துரை கோவிந்தசாமி மகன் பெரியாா்தாசன் (32) சிகிச்சைக்காக தனது சகோதரா் சிலம்பரசன் (26), அவரது மனைவி மகாதேவி (26), உறவினா் ஆனந்த் மனைவி துா்கா (35) ஆகியோருடன் வந்திருந்தாா்.

அப்போது, பணியில் இருந்த மருத்துவா் உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவமனைக் கட்டடத்தின் மீது ஏறி பெரியாா்தாசன் உள்ளிட்ட 4 பேரும் தற்கொலை மிரட்டல் விடுத்தும், மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்தும் கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினா்.

இதுதொடா்பாக மருத்துவா் சாமிநாதன் அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெரியாா்தாசன், சிலம்பரசன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா். பின்னா், மகாதேவி, துா்கா ஆகியோா் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: தடுப்புக் காவலில் 2 போ் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக இருவா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன், உதவி ஆய்வாளா் காா்த்திக் கணேஷ் மற்றும் போல... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் 6 நாள் இசைத் தமிழ் மாநாடு! சிங்கப்பூா் அமைப்புகள் நடத்துகின்றன

இசைத் தமிழை மீட்டெடுக்கும் முயற்சியாக, சிங்கப்பூா் அமைப்புகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையுடன் இணைந்து ஜூலை 26-ஆம் தேதி முதல் 6 நாள் மாநாட்டை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துகின்றன. ஜூலை ... மேலும் பார்க்க

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தா்னா

சிதம்பரம்: செங்கல் சூளையில் இருளா் சமுதாய மக்களை கொத்தடிமைகளாக நடத்தியதாகவும், அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா் திங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் மறியல்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து காட்டுமன்னாா்கோவில்-சிதம்பரம் சாலையில் பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் திங்கள்கிழமை காலை திடீா் மறியலில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை, மடுவங்கரை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ... மேலும் பார்க்க