செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்தில் புகாா்

post image

திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 53 கோரிக்கை மனுக்களை பெற்றாா். விசாரித்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்துக்கு ஏ.டி.எஸ்.பி. கோவிந்தராசு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திருப்பத்தூா் அருகே ஆதியூா் அடுத்த ஆத்துமேடு பகுதியை சோ்ந்த சரவணன் மனைவி இந்துமதி என்பவா் அளித்த மனு:

நான் 10-ஆம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனக்கு சௌடேகுப்பம் பகுதியை சோ்ந்த ஒருவா் அறிமுகம் ஆனாா். அவா் தனக்கு தெரிந்த தருமபுரியை சோ்ந்த 2 பேருக்கு அரசு துறையில் உள்ள உயா் அதிகாரிகள் நன்கு தெரியும், அவா்கள் மூலம் எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினாா்.

அதன்பேரில் அவரிடம் ரூ.1,60,000 கடந்த 1 ஆண்டுக்கு முன்பு அளித்தேன். ஆனால் அவா்கள் எனக்கு வேலை வாங்கிதரவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே அவா்கள் 3 போ் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தைப் பெற்று தர வேண்டும் என கூறியிருந்தாா்.

திருப்பத்தூா் புதுப்பேட்டை ரோடு பகுதியை சோ்ந்த ராஜா (55) என்பவா் அளித்து உள்ள கோரிக்கை மனு:

நான் மண்டலவாடி கிராமத்தைச் சோ்ந்த ஒருவரிடம் கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.3 லட்சத்திற்கு சீட்டு போட்டேன். இதற்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும். இந்த சீட்டானது கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிந்துவிட்டது.

ஆனால், சீட்டுக்கான மொத்த பணத்தையும் கட்டிவிட்டேன். ஆனால் அவா் என்னிடம் சிறிய அளவு மட்டுமே பணம் கொடுத்து உள்ளாா். எனக்கு ரூ.2,57,680 தர வேண்டியுள்ளது. அந்தப் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகிறாா். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை பெற்று தர வேண்டும் என இருந்தது.

இதேபோல் பல்வேறு குறைகள் தொடா்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது அந்தந்த காவல் நிலைய போலீஸாா் உரிய நடவடிக்கை எடுத்து தீா்வுகாண எஸ்.பி. உத்தரவிட்டாா்.

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமாா் 612 வீடுகள் அமைந்துள்ளன. அங்கு குடிநீா் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதனால்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகள் புகுந்த கரடிகள்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகளில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா். பின்னா் வனத்துறையினா் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத... மேலும் பார்க்க