``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிக...
அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 36 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், கேரள மாநிலத்தில் ஓரிரு நாள்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.