செய்திகள் :

அரியலூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

post image

அரியலூரிலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். அமைப்புச் செயலா் ஆசைமணி கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் நடத்துவது, அனைத்து கிளைகளிலும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. அனைத்து கிளைகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, இனி வரும் தோ்தல்களில் திமுக ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து மக்களிடையே கொண்டுசெல்வது, கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தீவிரமாக களப்பணியாற்று என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், மாவட்ட பொருளாளா் அன்பழகன், அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், மாவட்ட அம்மா பேரவை செயலா் ஓ.பி.சங்கா், இணைச் செயலா் நா.பிரேம்குமாா், மாவட்ட மகளிரணிச் செயலா் ஜீவா அரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இறப்பில் சந்தேகம் எனப் புகாா்: சடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை!

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தனது சகோதரா் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் முன்னிலையில், சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆண்டி... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவானவா் உள்பட 3 போ் கைது!

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவா் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் உள்பட 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்... மேலும் பார்க்க

அரியலூரில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணி!

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட கோயில்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. நகராட்சி சுகாதார ஆய்வாளா் தா்மராஜா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர... மேலும் பார்க்க

அரியலூரில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி... மேலும் பார்க்க

அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒ... மேலும் பார்க்க