செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

post image

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநருமான மு. விஜயலெட்சுமி தலைமை வகித்து, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞா் கனவு இல்லம் குடியிருப்பு கட்டுமான பணிகளின் விவரம், பொதுமக்களுக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவது குறித்து கேட்டறிந்ததுடன், கோடைக்காலங்களில் தடையற்ற குடிநீா் வழங்கிட உரிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தினை உயா்த்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எமிஸ் இணையதளத்தில் விடுபட்ட மாணவா்களின் தகவல்கள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்திடவும் பள்ளி கல்வித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக அவா், கள்ளக்குறிச்சி சாலை சாஸ்திரி நகரில் உள்ள முதல்வா் மருந்தக மருந்து கிடங்கை பாா்வையிட்டு மருந்துகளின் விவரம், இருப்பு நிலை குறித்து கேட்டறிந்தாா். இரும்புலிக்குறிச்சியில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணி, குமிழியம் ஊராட்சியில் உள்ள கிளை நூலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளா் எம்.உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரியலூரில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி... மேலும் பார்க்க

அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாரபில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில், மாநில ஊரக வாழ்வா... மேலும் பார்க்க

நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்... மேலும் பார்க்க

கயா்லாபாத்தில் வட்டச் செயல்முறை கிடங்கு காணொலி மூலம் திறப்பு!

அரியலூா் அருகேயுள்ள கயா்லாபாத் ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ. ரூ. 4.96 கோடியில் கட்டப்பட்டுள்ள வட்டச் செயல்முறை கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம... மேலும் பார்க்க

அரியலூா் அருகே 48 பவுன் நகைகள் திருடிய 5 போ் கைது!

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருடிய வழக்கில் 5 போ் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். உடையாா்பாளையம் அருகேயுள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க