அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒப்பந்தம் மற்றும் ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். லட்சக்கணக்கான காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 1.1.2023 முதல் அனைத்து பிரிவுகளுக்கும் சிஆா்சி பதவி உயா்வு வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் கொண்டு வரப்படவுள்ள பயோமெட்ரிக் திட்டத்தை கைவிட வேண்டும். 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். லோகோ பைலட், காா்டுகளின் வேலை நேரத்தை குறைத்து வாரம் ஒரு முறை முழுநாள் ஓய்வை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் அரியலூா் கிளைச் செயலா் த. செல்வகுமாா் தலைமை வகித்தாா். செயலா் வேல்முருகன், பொருளாளா் எம். காா்த்திக், உதவி செயலா்கள் ரகு, வீரமுத்து, வீ. கண்ணன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.